4 Aug 2021

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

SHARE

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் திங்கட்கிழமை(2) பகல் 1.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியும், பட்டிருப்பு கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதற்கு அமைவாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக  கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் துறைநீலாவணை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதுடன், தன்னுடைய மண்ணுக்கும், வலயத்திற்கும் சிறப்பூட்டும் வகையில் அளப்பெரிய சமூக,சமய, கல்விச்சேவைகளை செய்தும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி ரீதியான பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




 

SHARE

Author: verified_user

0 Comments: