9 Jul 2021

வானிலை முன்னறிவிப்பு

SHARE

வானிலை முன்னறிவிப்பு.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடுமுழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் குறிப்பாக 09ஆம், 10ஆம் திகதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக தேசிய வளிமண்டலவியல் நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம், இவ்விடையம் தொடர்பில் வியாழக்கிழமை(08) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75மில்லி மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: