19 Jul 2021

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

SHARE

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றனஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம், ஊடகங்களை வரவேற்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு, எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள். அடுத்த தலைமுறையினரை தன்னம்பிக்கையுடைய சமூகமாக கட்டியெழுப்ப அனைவரும் மாறவேண்டும்.

என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கம், ஆசிரியர்களுக்கும், ரெப் கணணிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ்  சனிக்கிழமை(17) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்ட்ட 14 பாடசாலைகளுக்கு 778 ரெப் கணணிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவரகளும் நானும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுக்குமாக 3943 ரெப் கணணிகள்  கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்டத்தின் கல்வி வழற்சிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் கல்வித்துறைசார் வழற்சியை மேம்படுத்துத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆளும்கட்சியில் இருக்கின்ற நாங்கள் ஒவ்வொரு துறைசார்;து வினைத்திறன் மிக்க சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கல்வி தொடர்பான விடையங்களை முதலாவதாக ஆராயப்படும் விடையமாக நாம் கொண்டு வந்திருக்கின்றோம். மட்டக்களப்பு மவாட்டத்தில் 25 சதவீதமாக வாழ்கின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 தேசிய பாடசாலைகளும், 75 சதவீதமாக வாழ்கின்ற எமக்கு 7 தேசிய பாடசாலைகளும் இருந்து வந்தன. நல்லாட்சி அரசாங்க காலத்தில் சில பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் விடையத்தில் பல முயற்சிகளை எடுத்தும், 2 பாடசலைகள்தான் தேசியபாடசாலையாக தரமுயர்த்தகப்பட்டன. ஆனால் 10 மாத காலத்திலே 15 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்திக் கொடுத்திருக்கின்றோம். இந்த பட்டிருப்பு கல்வி வலயத்தில் துணைநீலாவணை, காக்காச்சுவட்டை, பழுகாமம் அகிய இடங்களிலுள்ள பாடசாலைகள் மிக விரைவில் தேசிய பாடசாலைகளாக அங்குரார்பணம் செய்யப்படவுள்ளன. பட்டிருப்பு கல்வி வலயத்தில் பல்வேறுபட்ட பௌதீக வள்ஙகள் பற்றாக்குறை காணப்படுகின்றன.

அடுத்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தமிழருக்கானது இந்த வாய்ப்பை தாரை வார்க்கத் துணைபோகும் தமிழ் தலைவர்கள் என தெரிவித்து என்னுடைய பெயரையும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்களுடைய பெயரையும் இட்டு கல்விச் சமூகம் கிழக்கு மாகாணம் என எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

சிரேஸ்ட பதவி நிலையில் இருக்கின்ற பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகல்லாகமவிடம் எடுத்துரைத்தோம். ஆனால் முன்னாள் அரசியல்வாதிகள் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை அப்பதவிக்கு நியமிக்கக் கூடாது, பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் வரக்கூடாது என என செயற்பட்டார்கள். அவ்வாறானவர்கள்தான் தற்போது மொட்டத் துண்டுப்பிரசுரங்களை வெளியிடுகின்றார்கள்

மாவட்டத்திலே சிரேஸ்ட நிலையிலுள்ளவர்களை அடுத்தடுத்து பதவி நிலைகளுக்குத் கொண்டு வந்தால்தான் அடுத்தடுத்து எம்மவர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். என நாங்;கள் கலந்துரையாடியுள்ளோம். இவ்வாறான விடையங்களை நாசமாக்கியவர்கள் இந்த மாட்டத்தினுடைய முன்னாள் அரசியல்தாதிகள்தான்.

கிழக்கு மாகாண கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

காரமலை எனும் மேச்சல்தரைப் பகுதில் இராணுவத்தினரின் பயிற்சி நடவடிக்கை ஒன்று நடைபெறுவதாக தகவல் கிடைத்தவுடனேயே பண்ணையாளர்கள், மற்றும் இராணுவத்தினர், அரச நிருவாகத்தினரையும் அழைத்து பேசி 2 நாட்களுக்கும் மாத்திரம் அப்பயிற்சி நடைபெறுவதாக தெரிவித்து அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுத்தோம். அங்கு 10 ஏக்கர் காணியில் இராணுவமுகாம் அமைக்கப்படவுள்ளதாக முன்னாள் அரசில்வாதி ஒருவர்  ஊடகங்களில் அறிக்கை விட்டுள்ளார். சமூக ஊடகங்களில் சிலர் அறிந்ததை, தெரிந்ததை, புரிந்ததைத்தான் பேசுகின்றார்கள், எனவே அறிந்துகொண்டு, தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, யாரும் பேசவேண்டும்.

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம், ஊடகங்களை வரவேற்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு, எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள். அடுத்த தலைமுறையினரை தன்னம்பிக்கையுடைய சமூகமாக கட்டியெழுப்ப அனைவரும் மாறவேண்டும்.

கொவிட் சூழலிலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்திக்கத்திலும் அரசாங்கம் பல்வேறு காத்தரமான விடையங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: