இவ்விஜயத்தின்போது நீண்டகாலமாக ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பெயர் கர்பலா பொலிஸ் நிலையம் எனக்காணப்படுவதாக அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்களும் ஆலயபரிபாலன சபையினரும் இராஜாங்க அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதற்கிணங்க அப்பொலிஸ் நிலையத்தின்பெயரை ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு போலிஸ் நிலையமென பெயர்மாற்றம் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான உடனடி உத்தரவுகளை மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிறப்பிப்பித்தார்.
அத்தோடு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர்பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள அரசகாணிகளை ஊடறுத்து மண்முனைப்பற்று பிரதேச சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி கட்டடங்களை உடைத்த எச்சமான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதைகளையும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அரச காணிகளையும் நேரடியாக பார்வையிட்டதோடு அவற்றை அகற்றுவதற்கான பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மண்முனைப்பற்று பிரதேச சபையின் சபைக்கூட்டத்தில் பெரும்பான்மை பிரதேசசபை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி கனரக வாகனங்களை பயன்படுத்தி உடனடியாக இந்த நடைபாதைகளை ஆக்கிரமிப்பு காணிகளை அகற்றுமாறும் இதற்கான பூரணமான ஒத்துழைப்புக்களை மண்முனைப்பற்று பிரதேச சபையிலுள்ள அனைத்து தமிழ் இனப்பிரதேச சபை உறுப்பினர்களும் வழங்கவேண்டு மென்றும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத எந்தவொரு தமிழ் இனப்பிரதேசசபை உறுப்பினர்களும் தமிழர்களாக இருக்கதகுதியற்றவர்கள் என இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
ஆரையம்பதியின் கடற்கரையோரமாக எல்லைப்பகுதி காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய சூழலை பார்வையிட்டதோடு அவ்வாலயத்தின் உறுதியான இருப்பே ஆரையம்பதியின் நீண்டகால எல்லை மற்றும் கடல்வள இருப்பு பாதுகாப்பிற்கு அவசியமானதென அமைச்சர் கருத்துரைத்தார்
ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய நிர்வாகசபையினரின் வேண்டுகோளிற்கமைய ஆலய வளாகத்துள் தென்னங் கன்று ஒன்றையும் இராஜாங்க அமைச்சர் நட்டும் வைத்தார்.
0 Comments:
Post a Comment