அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 101 கலன் பியர் மதுபான கலன்களை வைத்திருந்த பெண் கைது.
சட்டவிரோதமான முறையில் விலை உயர்ந்த ஸ்ரோன் ரக பெருமளவு பியர் போத்தல்களை அனுமதிப் பத்திரமின்றி பதுக்கி வைத்திருந்த பெண்னொருவரை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவிற்குட்பட்ட சின்னக்குளனி கிராமத்தில்
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 500 மில்லி லீற்றர்
எடையுள்ள 101 பியர் கலன்கள் கைப்பற்றப்பட்டுளளன.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தலைமையிலான பொலிஸ்
பிரிவினர் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பேரில் மேற்படி மதுபானத்தை மீட்டுள்ளதுடன்
பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் பியர் கலன்கள் என்பன நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment