4 Mar 2021

உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி – கோறளைப் பற்றில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

SHARE

உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்திகோறளைப் பற்றில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி  வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 5 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இனைதலைவருமான சிவநேசதுரை. சந்திரகாந்தன் அவர்களினார் புதன்கிழமை(03) நடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு மற்றும் வறுமை ஒழிப்பு சிந்தனைக்கு அமைவாக  உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி என்கின்ற திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் 5 வீடுகளை வழங்கும் தீர்மானத்திற்க்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது வீட்டுக்கான அடிக்கல் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றது.

இதில் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் மற்றும் கோரளைப்பற்று தவிசாளர் சோபாஜெயரஞ்சித் உட்பட ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: