3 Mar 2021

கோட்டைக்கல்லாறு பொதுவிளையாட்டுக் கழக மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு.

SHARE

கோட்டைக்கல்லாறு பொதுவிளையாட்டுக் கழக மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு விளையாட்டுக் கழக மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் செவ்வாய்கிழமை(02) மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு  இராஜாங்க அமைச்சினுடைய முன்னெடுப்பின் கீழ் இலங்கை பூராகவும் 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறு விளையாட்டுக் கழக மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதித் தவிசாளர் திருமதி..ரஞ்சினி, விளையாட்டு உத்தியோகஸ்தர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: