17 Mar 2021

தேற்றாத்தீவில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி மரணம்!

SHARE

தேற்றாத்தீவில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி மரணம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு  கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்ட இரண்டரை வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக  களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையே  இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(16) தனது  வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுமி, அவ்விட்டு வளவில் அமைந்திருந்துள்ள கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளது.

சிறுமியின் தந்தை கிணற்றில் இருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற  நீதவான் திருமதிக.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக, களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: