அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு ஆக்கத்திறன் போட்டிகள்.
இந்துசமயகலாச்சார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு ஆக்கத்திறன் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(22) ஆரையம்பதி விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மத்தியில் கலை கலாசார விழுமியங்களை மேம்படுத்தும் நன்நோக்குடன் விரைவாக நிறைகுடம் வைக்கும்போட்டி மற்றும் ஓவியத்திறனை மேம்படுத்தும் நன்நோக்குடனான சித்திரப்போட்டி, என்பன இதன்போது இடம்பெற்றன.
இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசில்களை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.
0 Comments:
Post a Comment