11 Feb 2021

தென்னம் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்.

SHARE

தென்னம் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி முதலைமடு வயற்கண்டத்தில் அமைந்துள்ள தென்னம் தோட்டத்தை புதன்கிழமை(10) இரவு காட்டு யானைக்கூட்டம் அழித்து துவம்சம் செய்துள்ளது.

தற்போது பெரும்போக நெல் அறுவடைக் காலமாகையால் காட்டு யானைகளின் தாக்குதல்களும், அழிவுகளும், மிகவும், வெகுவாக அதிகரித்த வண்ணமுள்ள இந்நிலையில் புதன்கிழமை இரவு அப்பகுதியில் சுமார் 10 இற்கு மேற்பட்ட காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் உட்புகுந்து அப்பகுதியில் அமைந்துள்ள நெல்வயல்களையும் அழித்துள்ளதோடு, தென்னம் தோட்டம் ஒன்றையும் அழித்து துவம்சம் செய்துள்ளது.

நள்ளிரவில் காட்டுகள் வந்து தமது தென்னம் தோட்டத்தை அழிக்கும் சத்தம் கேட்டதும், அத்தோட்டத்தில் இருந்த இரு முதியவர்களும், மிகவும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து அங்கிருந்து ஒருவாறு வெளியேறியுள்ளனர்.

மிக நீண்டகாலமாகவிருந்து காலத்திற்குக் காலம் இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்களையும், அழிவுகளையும் எதிர் கொண்டுவரும் தமக்கு இதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமது பகுதியில் நிலைகொண்டுள்ள காட்டுயானைகளைப் பிடித்துக் கொண்டு யானைகள் சரணாலயத்தில் விடவேண்டும், அதபோல் மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள்ளும், வயல் வெளிகளுக்குள்ளும் வராமலிருக்க எல்லைப் புறத்தில் யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடு, மின்சாரம் இல்லாத தமது தோட்டங்களுக்கும், எல்லைப் பகுதிகளுக்கும், மின்சார வசதிகளையும் ஏற்படுத்திதி யானை சுமார் 15 வருடங்கள் பழமை வாய்ந்த பலன்தரும் தென்னைகளிக் அழிவுக்கு இழப்பீட்டையும் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் மிக நீண்டகாலமாகவிருந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





















SHARE

Author: verified_user

0 Comments: