29 Jan 2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் மற்றும் கல்லாறு சமுர்த்தி வங்கியானது கணனி மயப்படுத்தப்பட்டது

SHARE

(சர்ஜின்)

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் மற்றும் கல்லாறு சமுர்த்தி  வங்கியானது கணனி மயப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி மகா சங்கங்கள் அனைத்தையும் கணனி மயப்படுத்தல் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில்; மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லாறு சமுர்த்தி வங்கி மற்றும் களுவாஞ்சிகுடி சமுர்த்தி மகா சங்கம் என்பன கணனி மயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீறிக்காந்தன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக  புதன்கிழமை (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற 29 சமுர்த்தி வங்கிகள் மற்றும் 14 சமுர்த்தி மகா சங்கங்கள் என்பன கணனி மயப்படுத்தல் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில்  மண்முனை தென் எருவில் பிரதேச செயகத்திற்கு உட்பட்ட எருவில் கல்லாறு மாங்காடு சமுர்த்தி வங்கிகளும் களுவாஞ்சிகுடி சமுர்த்தி மகா சங்கம் என்பன கணனிமயப்படுத்த பட்டது வரவேற்கதக்க விடயம் ஆகும்.இந்த கணனி மயப்படுத்தல் வேலைத்திட்டமானது மண்முனை தென் எருவில் பற்று சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கந்தையா உதயகுமார் அவர்களின்  வழி நடத்தலில் மூன்று வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் வங்கி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அதிகளவான  பயனாளிகளை கொண்டு இயங்கும்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பகுதியில் இச் செயற்பாட்டினை உத்தியோகத்தர்களுக்கும் பயனாளிகளுக்கும் இலகுவாக அமைகின்ற வகையிலே இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இலங்கையில் எல்லா பாகங்களிலும் சமுர்த்தி வங்கிகளானது கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இச் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சகல சமுர்த்தி பயனாளிகளும் வறுமை எனும் நிலையிலிருந்து மீள வேண்டும் எனும் நோக்குடனே ஜனாதிபதி செயலணி பல்வேறு செயற்றிட்டங்களை சமுர்த்திக்கூடாக முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கூடாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ். எம.; பஸீர் மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி) முகாமைத்துவ பணிப்பாளர் கந்தையா உதயகுமார் மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி) தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார்   மற்றும் வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்














SHARE

Author: verified_user

0 Comments: