மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை ஏ .ஜேசுதாசன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை ஏ .ஜேசுதாசன் தனது கடமைகளை வெள்ளிக்கிழமை (08) பொறுப்பேற்றுக் கொண்டார் .
கடந்த மூன்று வருடங்கள் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இயக்குனராக பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் அருட்தந்தை எலக்ஸ் ரொபட் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்புவதோடு புதிய இயக்குனராக கடமைகளை பொறுப்பேற்றுக்கும் அருட்தந்தை ஏ .ஜேசுதாசன் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகணத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைக்கு ஏற்ப நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment