9 Jan 2021

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை ஏ .ஜேசுதாசன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை .ஜேசுதாசன்  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை .ஜேசுதாசன் தனது கடமைகளை வெள்ளிக்கிழமை (08) பொறுப்பேற்றுக் கொண்டார் .

கடந்த மூன்று வருடங்கள் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இயக்குனராக பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் அருட்தந்தை எலக்ஸ் ரொபட் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்புவதோடு புதிய இயக்குனராக கடமைகளை பொறுப்பேற்றுக்கும் அருட்தந்தை .ஜேசுதாசன் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகணத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைக்கு ஏற்ப நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







 

SHARE

Author: verified_user

0 Comments: