3 Jan 2021

கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பிரதான போக்குவரத்துச் சேவைகள் வழமை நிலையில்.

SHARE

கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பிரதான போக்குவரத்துச் சேவைகள் வழமை நிலையில்.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி நகரம் மூன்றாவது நாளாகவும் முழுமையான  முடக்கி நிலையில் உள்ளது.

முடக்க நிலை அமுலில் உள்ள போதிலும் காத்தான்குடி பிரதான வீதியூடான போக்கு வரத்துச் சேவைகள் வழியாக வழமை போன்று இடம் பெற்று வருகின்றன.

காத்தான்குடி பிரதேசத்தல் இராணுவத்தினரும் பொலிசாரும் அதிகளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பல உள்வீதிகள் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிசாரினால் மூடப்பட்டுள்ளன. நகரின வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.















SHARE

Author: verified_user

0 Comments: