களுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் தைப்பொங்கல் தினமான வியாழக்கிழமை(14) மாலை இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களில் ஒருவர் மரணம் 9 பேர் படுகாயம் அமைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
எருவில் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கின் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தபோது களுதாவளை கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வேன். அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென களுதாவளை பிரதான வீதியில் வைத்து குறுக்கீடு செய்ததில் விபத்து சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது, இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் களூவஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க பட்டிருப்பு உள்வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து களூவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, களுதாவளை கடற்கரை வீதியிலும் முச்சக்கர வண்டி ஒன்று தடம்புரண்டதிலும் ஒருவர் படுகாயமடைந்த மேற்படி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தைப்பொங்கல் தினமாக வியாழக்கிழமை (14) மாலை களுவாஞ்சிகுடி பகுதிக்குள் 4 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment