5 Dec 2020

களுவாஞ்சிகுடி பொலிசார் ஒருவருக்கு கொரோனா தொற்று.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிசார் ஒருவருக்கு கொரோனா தொற்று.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொரனா தொற்றுக்கள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரப்பணிப்பா
ளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று உறுதைப்பட்டுள்ளது

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (06) குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் கொரனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில் களூவஞ்சிகுடி ஆதார வைத்தியாசாலை வளாகம், குறித்த பொலிசார் சிகிச்சை பெற்று வந்த விடுதி என்பன கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை தற்போது முன்நெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை (05) புதிய தொற்று உட்பட கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: