17 Dec 2020

களுதாவளை விதாதா வள நிலையத்தில் மெழுகுவர்த்தி உற்பத்தி பயிற்சி.

SHARE

(ராகு)

களுதாவளை விதாதா வள நிலையத்தில்  மெழுகுவர்த்தி உற்பத்தி பயிற்சி.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை விதாதா வள நிலையத்தில்  மெழுகுவர்த்தி உற்பத்தி மற்றும் திரவபசை உற்பத்தி சார்ந்த விஞ்ஞான தொழிநுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டமொன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

இந்த தொழிநுட்ப பரிமாற்ற பயிற்சித்திட்டத்தின் வளவாளராக களுதாவளை விதாதா வளநிலையத்தின் விஞ்ஞானதொழிநுட்ப உத்தியோகத்தர் சௌந்தரநாயகம் தர்சன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விஞ்ஞான தொழிநுட்பம் சார்ந்த சுயதொழிற் பயிற்சிகளை மிகச்சிறப்பான முறையில் வளவாண்மை செய்து நெறிப்படுத்தினார்.

மண்முனைத்தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் இதன்போது பங்கேற்றிருந்தனர் இந்நிகழ்விலே களுதாவளை சாந்திபுரம் கிராமசேவையாளர் பிரிவை சேர்ந்த கிராமசேவை உத்தியோகத்தர் மண்முனைத்தென் எருவில்பற்று பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இரத்தினசிங்கம் விவேகாநந்தராஜா, மற்றும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்  மகாலிங்கம் ருமணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்













SHARE

Author: verified_user

0 Comments: