20 Dec 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை மூன்று மணித்தியாலங்களில் 13.4 மில்லிமீற்றர் மழை பதிவு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை மூன்று மணித்தியாலங்களில் 13.4 மில்லிமீற்றர் மழை பதிவு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (20) காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான மூன்று மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தில் 13.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, காத்தான்குடி நாவற்குடா ஆரையம்பதி கொக்கட்டிச்சோலை, உட்பட பல தாழ் நில இடங்களில் பாதைகளில் நீர் தேங்கியுள்ளமையால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

புரவி சூறாவளி அச்சம் நிலவிய காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் வயல் நிலங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.








SHARE

Author: verified_user

0 Comments: