மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதியினை வழங்க கோறிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி இந்த நகர்த்தல் பிரதி தாக்கல் செய்யப்பட்டபோதும் 26 ஆம் திகதி நீதிமன்றம் கட்டளைக்கு நியமித்திருந்தது ஆனால் கொவிட்-19 தாக்கம் காரணமாக குறித்த திகதி யில் வழக்கு நடைபெறவில்லை. அதனால் 2 ஆம் திகதிக்கான கட்டளைக்கு நியமிக்கப்பட்டிருந்தது ஆயினும் இன்றும் மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவில்லை.
ஆனாலும் குறித்த இந்த கட்டளை நீதிபதி ரீ.சூசைதாஸன் தலைமயில் நடைபெற்றது இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று அதன்மூலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்ற கட்டளையூடாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தினை அனுகும்படி கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரனி ச.மங்களேஸ்வரி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment