2 Nov 2020

கொரோனாவால் மட்டு.கொழும்புக்கிடையிலான புகையிர சேவைகளும் ரத்து

SHARE

கொரோனா மட்டு.கொழும்புக்கிடையிலான  புகையிர சேவைகளும் ரத்து

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.

தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இருசேவைகளும்  இடம் பெற்று வந்தன தற்போதைய சூழ்நிலைகளினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புகையிரத நிலையம் தறபோது பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. 























SHARE

Author: verified_user

0 Comments: