6 Sept 2020

அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம் வீடுகள் உடைப்பு மயிரிழையில் தப்பிய மக்கள் - வேத்துச்சேனையில் சம்பவம்.

SHARE


அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம் வீடுகள் உடைப்பு மயிரிழையில் தப்பிய மக்கள் - வேத்துச்சேனையில் சம்பவம்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த 3 காட்டுயானைகளால் அக்கிராமமே விடிய விடிய கண்விழித்திருந்ததாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை வேத்துச்சேனைக்கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த சிரமங்களுக்குட்பட்டு, அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் வீடுகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீடுகளில் மக்கள் தமது உணவுக்காக வைத்திருந்த நெல் மூட்டைகளையும் உண்டு சேதப்படுத்தி, மற்றும், வேலிகள், மற்றும் நெல்குற்றும் ஆலை ஒன்றையும் முற்றாக அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளன. 

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எமக்கு அதிகாலை ஒரு மணியளவில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டது நான் மாத்திரம் வெளியில் வந்து பார்த்தேன் மிகவும் உயரமான யானை ஒன்று எமது வீட்டை நோக்கி வருவதை அவதானித்தேன் பின்னர் நான் உறக்கத்;திலிருந்த மனைவி பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துவிட்டோம். பின்னர் இன்னுமொரு யானை வந்து. இரண்டு யானைகளுமாக எமது வீட்டின் முன் சுவர் பகுதியை உடைத்து உள்ளிருந்த 12 நெல் மூட்டைகளையும் இழுத்து நிலத்திலே கொட்டி உண்டு விட்டு சேதப்படுத்தின.  

இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடிவிட்டனர், யானைகள் எமது வீட்டை உடைப்பதை அவதானித்த நாம் அயலவர்களின் உதவியுடன், தீப்பந்தம் ஏந்தியும், உரக்கச் சத்தமிட்டும் யானைகளைத் துரத்த முயச்சித்தோம், எம்மைப் பொருட்படுத்தாத யானைகள் எம்மை தாக்குவதற்கு துரத்தி வந்தன. நாம் வீட்டிற்குள்ளே உறக்கதிலிருந்து எழும்பாமல் இருந்திருந்தால் எமது 4 பிள்ளைகளைகளும் நாமும், உயிரிழந்திருப்போம், மயிரிழையில் உயிரி தப்பினோம். எம்மை கடவுள்தான் காப்பாற்றினார் எமக்கு என்ன செய்வதென்று தெரியாதுள்ளது என நள்ளிரவு வேiளியல் காட்டுயானையின் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய 4 பிள்ளைகளின்  குடும்பஸ்த்தர் சீனித்தம்பி  போபாலசிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்வம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அக்கிராமத்தினுள் மற்றுமொரு வீட்டை மற்றொரு காட்டு யானை தாக்கியுள்ளதில் அவ்வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட அந்த யானை அவ்வீட்டின் யன்னல் பகுதியை தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

பின்னர் 3 யானைகளும் கிராமத்திலிருந்த மரவள்ளி தோட்டம், மற்றும் வாழைகளையும் அழித்துள்ளன. அதன் பின்னர் ஒருவாறு மக்கள் ஒன்றிணைந்து அதிகாலை சுமார் 3 மணியளவில் கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளர்.

இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ள போதிலும் நாங்கள் கிராமத்தில் நிலை கொண்டிருந்த காட்டுயானைகளை ஒருவாறு வெளியேற்றிய பின்னர்தான் அவர்கள் வந்தார்கள், எம்மிடம் யானை வெடிகள்கூட இல்லை கிராம சேவகர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். என வேத்துச்சேனைக் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவலர் எஸ்.கமலேஸ்வரன்  தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீணட்ட காலமாக விருந்து தொடர்கiதாயாக இந்த காட்டுயானைகளளின் தொல்லைகளும். அட்டகாசங்களும் அதிகரித்து வருகின்றதோடு இதனாலா பல அப்பாவி உயிர்களும் காவு கொள்ளப்படு வருவதோடு, சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருகின்னமை எடுத்துக்காட்டாகும்.  

































SHARE

Author: verified_user

0 Comments: