12 Sept 2020

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு.

அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கள்கிழமை (14) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இயற்கை அனர்த காலங்களில் மக்களுக்கு செய்திகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான பயிற்சி கருத்தரங்காக அமையவுள்ளது இத்துறையில் அனுபவம்வாய்ந்த வளவாளர்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

அனர்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் அதாவது மனிதர்களாளும் எற்படுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளவேளைகளில் பத்திகையாளர்கள் எவ்வாறு மக்களுக்கு செய்திகளை வழங்குவது என்பன பற்றிய விடைங்களை பத்திரிகையாளருடன் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளது இந்த பயிற்சிக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட ஊடக வியலாளர்கள் சகலரையும் கலந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் கேட்டுக்கொன்டார்.

இப்பயிற்சிக்கருத்தரங்கானது அரசாங்கத்தின் விரிவான நிலைபெறான அபிவிருத்தி செயல் திட்டத்தினுடாகவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது இடர்காலங்களில் சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் ஏனை மக்களையும் அனர்தங்களில் இருந்து எவ்வேளையும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களும் பத்திகைத்துறையினரும் உதவியாக இருப்பது அவசியமானது என உனர்ந்து இத்திட்டங்களை அரசு முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: