21 May 2020

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்.

SHARE
(குணா)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர   ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Organisation for Vulnerable Community Development (VOVCODநலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு”  என்ற அரசு சார்பற்ற நிறுவனம் 53 ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை இன்று (21) வழங்கினார்கள். இவர்களால் ஏற்கனவே தற்காலிக ஊழியர்களின் சேவையை பாராட்டி 18-03-2020  அன்று 65 ஊழியர்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்டிருந்தது

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் 21-05-2020 பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் பொது சுகாதார அதிகாரி திரு தவராசா பிரதேச சபையின் செயலாரரும், VOVCOD சார்பில் திரு தர்மலிங்கம் கணேஷ் விபுலானந்த கல்லூரி அதிபர் திரு ஜெரோம் மற்றும்   ச.நடேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: