கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்காக வேண்டிய பெரியபோரதீவு காளிஅம்பாள் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு.
உலகில் பீடித்துள்ள கொரோனா நோயிலிருந்து மக்களை மக்களை மீட்டு பாதுகாப்பதற்காக வேண்டிய மட்டக்களப்பு பெரியபோரதீவு வரலாற்றுச் சிறப்பு மிக்க காளிகோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் வெள்ளிக்கிழமை (03) மாலை இடம்பெற்றது.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் சர்வேதேசமே கதிகலங்கி நிற்கும் இந்நிலையில் மத இஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும், ஆராதனைகளும், இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு பெரியபோரதீவு காளிஅம்பாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, தீபங்களும் ஏற்றிவைக்கப்பட்டன.
நாட்டையும், நாட்டு மக்களையும், அதுபோல் இலகைவாழ் மக்களையும் இந்நோயிலிருந்து காளியம்பாள் பாதுகாக்க வேண்டும் என இதன்போது அம்பாளுக்கு பூஜைகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை வழிபாட்டில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment