ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
கொரோனா நோயின் பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பல தன்னார்வ தொண்டர்களும், அரசாங்கமும் தங்களாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஜெய நிதிய கலியாணி யூவலர்ஸ் உரிமையாளர் யோ.ஜெயமேகனின் நிதியுதவியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது ஜெய நிதிய கலியாணி யூவலர்ஸ் நிறுவனத்தினர், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment