5 Apr 2020

கொரொனா தொற்றிலிருந்து மக்கள் மீள்வதற்குமாக வேண்டி திருப்பழுகாமத்தில் மகாயாகத்துடன் கூடிய பூசை வழிபாடு.

SHARE
கொரொனா தொற்றிலிருந்து மக்கள்  மீள்வதற்குமாக வேண்டி திருப்பழுகாமத்தில் மகாயாகத்துடன் கூடிய பூசை வழிபாடு.
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வர தேவஸ்தான (ஸ்ரீ சிவன் ஆலய ) வருடாந்த மகோற்சவமானது 28.03.2020 திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.04.2020 அன்று அதாவது பங்குனி உத்தர தினத்தன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற உத்தேசிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் காரணமாகவும் பக்தர்களின் நலன் கருதியும் மகோற்சவமானது இடம்பெறவில்லை. ஆதலால் பங்குனி உத்தரத்தை முன்னிட்டும் கொரொனா தொற்றிலிருந்து மக்கள்  மீள்வதற்குமாக வேண்டி திங்கட்கிழமை (06.04.2020) காலை 08.00 மணியளவில் மகாயாகத்துடன் கூடிய பூசை வழிபாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆலய அறங்காவலர் சபையினரும் திருப்பணிச்சபையினரும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர். 



SHARE

Author: verified_user

0 Comments: