(துசா)
கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு வெளியீடு.
வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்து, இவ்இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டது.
கொரோனா தொற்று ஏற்படும் வழிமுறைகள், அதிலிருந்து மக்கள் தம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளுதல், கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்பு எவ்வாறு தொற்றுக்குள்;ளானவர்கள் நடந்துகொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் இவ்இறுவெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த இறுவெட்டினை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர்.தி.தவனேசன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரனிடம் வழங்கி வெளியீடு செய்து வைத்தார்.
மேலும், இதன்போது கலந்து கொண்டிருந்த சுகாதார திணைக்கள உயரதிகாரிகளுக்கும் இறுவெட்டு வழங்கி வைக்கப்பட்டது. மாகாணத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், நகரசபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்ற வற்றிற்கும் குறித்த இறுவெட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பில் முதலாவதாக வெளிவந்த இறுவெட்டு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியின் முயற்சியினால், இறுவெட்டு வெளியாகியுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.
0 Comments:
Post a Comment