5 Mar 2020

கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு.

SHARE
கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்திலுள்ள கிணறொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை 05.03.2020 மீட்கப்பட்ட அந்தச் சடலம் கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை தேவி (வயது 35) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதக் கூறாய்வுக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்திருக்கும் அதேவேளை பொலிஸார் மேலதிக புலனாய்வு விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: