9 Feb 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட முன்வரவேண்டும் - கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன் வேண்டுகோள்.

SHARE
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட முன்வரவேண்டும் - கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன் வேண்டுகோள்.
கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை  கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில் போட்டியிட  முன்வந்திருக்கும் நிலையில்  தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

கிழக்கு தமிழர் ஒன்றியம்  எல்லா கட்சிகளையும் ஒன்றினைப்பதற்காக பொது மக்களை அறிவூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுடன் வெள்ளிக்கிழமை (07) கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்..

கிழக்கு தமிழர் ஒன்றியம் கடந்த 2 வருடங்களாக கிழக்கு மாகாணத்திலே இருக்க கூடிய சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து வருகின்ற தேர்தலிலே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு பொது சின்னத்திலே போட்டியிடவைப்பதற்கான முயற்சியை தொடர்ச்சியாக கொண்டு வந்திருந்தோம் அந்த ஒன்றினைக்கும் பணி இன்று கைகூடியுள்ளது.

அதன் பயனாக எல்லா கட்சிகளும் கிழக்கு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று  சேர்ந்து பயனிக்க வேண்டும் என மனதார விருப்பங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சில கட்சிகள் அறிக்கை மூலமும் தந்துள்ளனர். எனவே தேர்தல் திணைக்களத்திலே எங்களுக்கான பொதுசின்னம் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அந்த சின்னத்தை  வெளிப்படுத்துவோம். 

கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலநிலை கருதி எல்லா கட்சிகளும் ஒன்றினைந்து பொதுசின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர் எனவே  பொது சின்னத்தில் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம். கிழக்கு மண்ணை பெறுத்த மட்டில் அதிகமான வேட்பாளர்களை நாங்கள் பாராளுமன்றத்துக்கும் மாகாணசபைக்கும் அனுப்பி  இந்த ஆட்சியாளரில் ஒரு பங்காளிகளாக மாறி கிழக்கு மாகாணத்தில் இருக்க கூடிய இந்த மக்களின் அன்றாட அத்தியவசிய பிரச்சனை அனைத்தையும் இராஜதந்திர ரீதியில் மிகவும் சாணக்கியமாக அனுகி ஒரு முடிவையடையலாம். 

2009 பாராளுமன்றத்தில் தேர்தல் திருத்தச்சட்டடத்தின் பிரகாரம் பிரிவு 8ஏ என்ற பகுதியில் சேர்கப்பட்டுள்ளதனடிப்படையில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து ஒன்றினைந்து அவர்களுக்கான பொதுசின்னம் தேர்தல் ஆணையாளரால் வழங்கப்படும். 

அதனடிப்படையில் நாங்கள் தமிழ் மக்களின் நன்மைகருதி கிழக்கில் இருக்க கூடிய எல்லா கட்சிகளையும் ஒன்றினைத்து ஒரு தேர்தல் கூட்டு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒரு பொதுவான சின்னத்தை தோற்றுவித்து அதில் தேர்தலில் களமிறங்கும் ஒரு கூட்டு தலைமைத்துவ பணியை மாத்திரம் ஒன்றினைத்து ஒன்றித்து அந்த பொதுசின்னத்தின் கீழ் எல்லா கட்சிகளையும் போட்டியிட வைப்பது தான் எமது பணியாக இருக்கும்.  

அதேவேளை கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் எக்காலத்திலும் தேர்தலிலே போட்டியிடமாட்டார்கள் கிழக்கு தமிழர் ஒன்றியமும் தேர்தலிலே தனித்து போட்டியிடாது. 

எனவே உங்களுடைய தனிப்பட்ட சுயநலனுக்காக பிரிந்து சென்று தேர்தலை சந்திக்க நேர்ந்தால் அது கிழக்கு மாகாணத்தை பெறுத்தளவில் ஒரு துரஷ்டமான சம்பவம் என எங்களால் கூறமுடியும் அதேவேளை இதனால் தமிழ் மக்களுக்கு நீண்ட இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்து கிழக்கு தமிழர் எடுக்கும் இந்த முயற்சிக்கு  தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி செயற்படவேண்டும் என தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: