கராத்தே விருது வழங்கும் நிகழ்வு.
ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் (துமுஆழு) அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாடும் மீன் ஓய்வு விடுதியில், திங்கட்கிழமை 17.02.2020 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முதல்வர் எம். புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. ஈஸ்பரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. லவக்குமார் உட்பட இன்னும் பல அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கராத்தே வீரர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், வரவேற்பு கலை நிகழ்வுகள், கவிதை, சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு, அதிதிகள் கௌரவிப்பு போன்ற அம்சங்களும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment