1 Feb 2020

பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மாவட்டஅரசாங்கஅதிபர் கலாமதிபத்மராஜா அவர்களை மாவட்டசெயலகத்தில் சந்தித்துமாவட்டம் தொடர்பான அபிவிருத்திகளைஆராய்ந்தனர்.

SHARE

கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கானபின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைமீன் பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கானபின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மாவட்டஅரசாங்கஅதிபர் கலாமதிபத்மராஜா அவர்களை மாவட்டசெயலகத்தில் சந்தித்துமாவட்டம் தொடர்பான அபிவிருத்திகளைஆராய்ந்தனர்.
இலங்கைக்கானபின்லாந்து தூதுவரின் மட்டக்களப்பு விஜயத்தில் தான் முதலாவதாக இம் மாவட்டத்தில் பல்லினசமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற இம் மாவட்டத்தினைநான் பார்க்கிறேன் எனவும் அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றமீன் வளத்தினைநவீனமுறையில் அபிவிருத்தியினைமேற் கொண்டு பெறுமதிவாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முளுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்குதனதுஅரசுமுழுமையானஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கு ஊடாகசெய்து கொடுப்பதாககுறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்குபகுதியை எடுத்துக் கொண்டால் அழகான நீலநிறமாக காட்சியளிக்கின்ற கடல் மிகுந்தபிரதேசமாகவும் மேற்குப் பகுதியைப் பார்த்தால் அழகியபசுமைநிறைந்தவயல் வெளிகளைகாணக் கூடியதாக இருக்கின்றதுஎனவும் இம் மாவட்டத்தில் சகலவிதமான பழ வகைகளும் இம் மாவட்டதில் கிடைக்கின்றது. எல்லாவகையானவளமும் உள்ள இம் மாவட்டத்தினைமேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் மாவட்டஅரசாங்கஅதிபர் கலாமதிபத்மராஜா,மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலாபுண்ணியமூர்த்திமற்றும் பகுதிதலமைஉத்தியோகத்தர் ஜஸிம் பாகிர் மற்றும் மாவட்டமீன் பிடித் திணைக்களஉத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: