7 Nov 2019

மட்டக்களப்பு மக்களுக்கும் அமைதியும் அபிவிருத்தியும் இலங்கையர் என்ற அடையாளமும் தேவைப்படுகின்றது. பிரதமர்.

SHARE
மட்டக்களப்பு மக்களுக்கும் அமைதியும் அபிவிருத்தியும் இலங்கையர் என்ற அடையாளமும் தேவைப்படுகின்றது. பிரதமர்.
நாட்டின் ஏனைய மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பதுபோல மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் அபிவிருத்தியும் அமைதியும் இலங்கையர் என்ற அயைடயாளமும் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் இளைஞர் யுவதிகளுக்கான சந்திப்பு ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில்  புதன்கிழமை பகல்  06.11.2019 இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இந்தப் பிரதேசத்திலே மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல கூட்டங்களிலே தெளிவாகக் கூறியுள்ளேன்.

ஏனைய மாவட்ட மக்களைப்போல மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் தேவைப்படுகின்றது.

2015ஆம் ஆண்டும் அன்னத்திற்கு வாக்களித்து சாதி மத பேதத்தை ஒழித்தோம்.
ஆனாலும் ராஜபக்ஷகள்’ தலையெடுத்து இனவாதத்தைக் கொண்டு மீண்டும் நாட்டைச் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள்.

ஒவ்வெசாரு விதமாக பல மட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதேபோன்று தமிழ் மக்களுக்கெதிரான நடலவடிக்கைளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இவர்கள்தான் தலதா மாளிகையைச் சுற்றி இரவு ரேஸ்  ஓடியவர்கள்.
தலதா மாளிகைக்கு குண்டு வீசும் செய்தியைச் சொன்னவர்களும் இவர்கள்தான்
அவர்களிடம் கையிருப்பில் இருப்பது இனவாதம் மட்டுமே.

கோட்டாவின் அறிக்கையை முழு நாடும் அறிந்திருக்கின்றது.
எமது தேவைபப்பாடு இனவாதமல்ல அமைதியோடும் அபிவிருத்தியோடும் இலங்கையர் என்ற அடையாளத்தோடும் முன்னோக்கிச் செல்லுதல் என்பது மாத்திரமே நமக்கு உள்ளது.
அந்தத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் சஜித் பிறேமதாஸவுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, சஜித் பிறேமதாஸவுக்கு வழங்குகின்ற வாக்கு ஒற்றுமைக்காகவும் இலங்கையர் என்ற அடையாளத்துக்காகவும் வழங்கப்படுகின்ற வாக்காகும்.

அதனால் நொவெமபெர் 16ஆம் திகதி சஜித்துக்கு வாக்களித்து ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவோம்.

இனங்களுக்கிடையிலான இந்த விடயத்தில் முன்னின்று பாடுபடும் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுக்கு நான் விசேட நன்றியறிதல்களைப் தெரிவித்துக் கொள்கின்றேன்.” அங்கு வருகை தந்திருந்த தமிழ் முஸ்லிம் யுவதிகள் தங்களுக்கு நவின தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தரக் கூடிய அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு கேட்டக் கொண்டதற்கு சாதகமான பதிலளித்த பிரதமர் அதற்கான திட்டங்கள் ஏற்கெனவே வரையப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: