14 Sept 2019

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

SHARE
மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.மட்டு நகரில் அமைக்கப்பட்ட தனியார்பஸ் நிலையம் 65மில்லியன் ரூயபாயில் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலை 10.00மணிக்கு மாநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணியின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

இது நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழஇவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பாட்டாலிசம்பிக்கரணவக்க தன்துறையில் குறிப்பிடும் போது மட்டக்களப்பு விமான நிலையத்தை ஒரு கேந்திர நிலையமாக மாற்று வர்தகங்கரமாக மாற்றினால் வேறு நாடுகளுக்கு நாம் சென்று உழைக்க வேண்டியதில்லை அதுபோல் மட்டக்களப்பிற்கும் - திருகோணமலைக்கும் இடையில் பாரிய வீதிகளை அமைத்து மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் அத்தோடு அம்பாறை - மட்டக்களப்புக்கு வர்த்தக கேந்திர நிலையங்களை நிறுவி வர்தகத்தில் மேன்மை அடையசெய்யவேண்டும். அத்தோடு இனரூபவ்மத பேதங்களுக்கு அப்பால் செய்யப்படுகின்ற எனது அமைச்சு யாழ்பாணத்தில் மாநகரசபைக்கு கூட்டம் வழங்கியது போன்று மட்டகளப்புக்கும் அவசியம் உள்ளது நிதிகிடைக்கும் போது அதனையும் செய்து தருவதாக கூறினார்.

பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட
நிலையில் அவரின் தவீர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான் திறந்து வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவரின் தவீர்க்க முடியாதகாரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான் திறந்துவைக்க வேண்டியிருந்தது இன் நிகழ்வின்
குறிப்பிடத்தக்கது.

மக்களின் தனியார் பேரூயஅp;ந்து நிலையம் மாவட்ட பாவணைக்கு கையலிக்கும் நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் ஆரமபிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிNசைன் மாநகர முதல்வர் தி.சரவணபவான் மாநகரசபை உறுப்பினர்கள் நகர அபிவிருத்திசபையின் பணிப்பாளர் நாயகம் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: