9 Jun 2019

ஜேர்மன் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான தேரர் ஆகியோர் இணைந்து சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்

SHARE
ஜேர்மன் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான தேரர் ஆகியோர் இணைந்து  சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்.
குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு வானவில் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஹென்றிக்  உள்ளிட்ட குழுவினர்  சனிக்கிழமை (08.06.2019)  வருகை தந்திருந்தனர்.

சீயோன் தேவாலய  குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை ஜேர்மன் நாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு தேவையான தகவல்களை பெறும் பொருட்டு தாம் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாகவும் வத்தேகம சமிந்த தேரர் தெரிவித்தார்.

இனவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு இன மத வேறுபாடுகளுக்கு அப்பால்  செயற்படவேண்டுமெனவும், உலகின் எந்தப் பகுதிகளிலும் இவ்வாறான கொடுஞ்செயல்கள் நிகழாதிருக்க தாம் இறைவனைப்  பிராத்தனை செய்வதாகவும் வத்தேகம சமிந்த தேரர்  மேலும் தெரவித்தார்.

குழுவினர் குண்டு வெடிப்பினால் சேதமுற்ற சியோன் தேவாலயத்தினையும் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் குறைபாடுகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.‪


SHARE

Author: verified_user

0 Comments: