18 May 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதியில்.

SHARE
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை(18) மட்டக்களப்பு ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
பா.அரிநேத்திரன், பொன்.செல்வராசா, முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம்,  இரா.துரைரெத்தினம், மற்றும், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதித்த தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதவாளர்கள், வாலிபர் முன்னியினர், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உயிர்களின் ஆன்மா ஈடேற்றத்திற்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

























SHARE

Author: verified_user

0 Comments: