14 May 2019

கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்களில் மட்டக்களப்பு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன.

SHARE
கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள். என்ற தகவலை கிழக்குமாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்றல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத் தளபத்திக்கு ஒருதகவலை செவ்வாய்க்கிழமை (14) அனுப்பியுள்ளோம். என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (14) மட்டக்ளப்பு கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இவ்வாறான சம்பவங்கள் காத்தான்குடியில் இருக்கின்ற ஒரு பிரபலமான அரசியல்வாதியின் தலைமையின் கீழே இயங்கிய ஆயுதக் குழுக்களினால் இது நடைபெற்றிருப்பதாகவும், குறித்த தமிழ் மக்களின் சடலங்கள் மட்டக்களப்புப் மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதியிகளிலே புதைக்கப்பட்டிருக்கின்றன. எனும் செய்தியையும் நாங்கள் அறிவித்திருக்கின்றோம்.

குறித்த இடங்களில் சடலங்களை புதைக்கப்பட்டுள்ள விடையங்களை அடையாளப்படுத்துவதற்குரிய சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன. என்பதையும் மிகவும் உறுதியாகவும், தெழிவாக கூறியிருக்கின்றோம். இவ்விடத்தில் இலங்கை இராணுவத்தினரின் மீது நம்பிக்கை வைத்து, நாங்கள் இந்த தகவலை வழங்கியிருக்கின்றோம். 

சம்மந்தப்பட்ட இடங்களைத் தோண்டி சடலங்கள் கண்டறியப்பட்டால், ஏராளமான உண்மைகள் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மிக முக்கியமாக காணாமல்போன பிரபலங்கள், அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் மதனிப்பட்ட தொழிற் போட்டி காரணங்களுக்காகவும் காணாமல் போயிருக்கின்hர்கள். அவ்வாறானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பிலே பல இடங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களை எமது சாட்சியங்களைக் கொண்டு, தோண்டியெடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கையை விடுத்திருக்கின்றோம். 

இந்த விடையம் கடந்த மூன்று நாட்களுக்குள்ளேதான் நாங்கள் அறிந்தோம், அதங்கிணங்க நாங்கள் எமது கொரிக்கையை அனுப்பியுள்ளோம். இந்த விடையம் கூடி மறைக்கப்படக் கூடுhது என்பதற்காக நாங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை நாம் வெளியிடவில்லை. நிற்சயமாக எமது சாட்சியாளர் இராணுவத்தினருக்கு உரிய இடங்களை அடையாளப்படுத்துவார். 

இவ்வாறான சம்பவங்கள் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் கீழ் இயங்குகின்ற ஆயுதக்குழுக்களால்தான் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது வரைக்கம காத்தான்குடியில் ஆயுதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை அதிகம்போர நீண்ட நாட்களிலிருந்து சொல்லி வந்திருக்கின்றார்கள், அதன்போது வரைக்கும் அவை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு வருகின்றதை நாம் அறிகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: