9 Apr 2019

மட்டக்களப்பில் பின்தங்கிய முன்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத் திட்டம்.

SHARE
மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுடன் அவர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினரால் நிக் அன்ட் நெல்லி நிதி அனுசரணையில் போரதீவு பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் கி.இ.ச.ச.அ.சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
இந்த திட்டத்தினை  சிறப்பிப்பதற்காக இவர்களுடன் பல சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் சேர்ந்து பங்களிப்பினை நல்கி இந்நிகழ்வினை வலுவூட்டியமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கிழக்கின் கரங்கள், நாம் தமிழர் அமைப்பினர், பாலர் பாடசாலைகள் ஆகியன பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பின்பேரில் வருகைதந்த அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் முன்பிள்ளை வைத்திய ஆலோசகருமான வத்தியர் க.அருளானந்தம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், போரதீவு பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் குணரெட்ணம், போரதீவு பற்று உதவி பிரதேச செயலாளர் புவனேந்திரன், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளர்.  பாலச்சந்திரன்;, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் மற்றும் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.  

பிரதேதச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மிகப் பின்தங்கிய மாலையர்கட்டு கிழக்கின் ஒளி பாலர் பாடசாலை, திக்கோடை பாலமுருகன் பாலர் பாடசாலை, கண்ணபுரம் நாராயணன் பாலர்பாடசாலை ஆகியவற்றுக்கான 2019 ஆண்டுக்கான சத்துணவு வழங்கும் ஏழாவது திட்டம் இனிதே ஆரம்பி;த்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக இந்த மாணவர்கள் மத்தியில் பல அதிதிகள் விழிப்பூட்டும் கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் அங்கு வருகை தந்த மாணவர்களுக்கான புத்தகப்பைகள்,  சுகாதாரமாண உணவுப்பொதிகள் உட்பட பல பொருட்கள் நலன்விரும்பிகளின் உதவியில் கொண்டு கொடுக்கப்பட்டு மாணவர்களின் பாடசாலைக்கு செல்லும் ஆர்வத்தினை தூண்டிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உள்ள பாடசாலை செல்லும் குழந்தைகளுக்காக சுகாதார சிகிச்சை முகாம் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பல வைத்தியர்களும், தாதியர்களும் மேலும் பல சுகாதார ஊழியர்களும் பங்காற்றி இம்மாணவச் செல்வங்களின் சுகாதரம் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடையே ஆரோக்கிய ஆலோசனைகளும் வழங்கிவைக்கப்பட்டன. இது கல்விகற்கும் குழந்தைகளின் உள, உடல் உறுதியை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த செயற்பாடாக இருக்கின்றது.



















SHARE

Author: verified_user

0 Comments: