5 Mar 2019

சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வையூட்டும் ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்களின் ஓவியம் வரைதல்

SHARE
சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான  விழிப்புணர்வையூட்டும் ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்களின் ஓவியம் வரைதல்.
சுற்றுச்சூழல் மாசடைவதைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கோடு, ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்கள் பங்குபற்றி ஓவியங்களை வரைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் கல்வி கலாசார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் JICA Sri Lanka  ஜெய்கா நிறுவனம் என்பவற்றின் இணைந்த ஒழுங்கமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச உள்ளக கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் “ஜப்பான் ஆர்ட் மெயில்” எனும் தொனிப்பொருளில் இவ் ஓவியப் போட்டி நிகழ்வு  நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

குறிப்பாக காடுகளை அழித்தல், கழிவு நீரை நேராக நீர்நிலைகளுள் விடுதல், இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் இருநாட்டு மாணவர்களின் ஆக்கங்களும் அமைந்திருந்தன.

ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வதியும் மக்கள் சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பாகவும், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும், இவ்வாறான மாசடைதலில் இருந்து எதிர்காலத்தில் தாம் வாழும் சூழலை பாதுகாப்பது தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் அனைத்தும் 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிப்பிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‪‬
இந்த ஓவியப் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய வின்n;சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்களுக்கும் அது தொடர்பாக அதிக அக்கறையுடன் செயற்பட்ட ஆதிபர், ஆசிரியர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.








SHARE

Author: verified_user

0 Comments: