எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) வெல்லாவெளியில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்தில் இடம்பெற்றது.
கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ப.கோணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் க.ஜீவராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கி வைத்தனர்.
ஆர்.டி.பி வங்கி களுவாஞ்சிகுடி கிளை, மக்கள் வங்கி களுவாஞ்சிகுடி கிளை, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், ஆகியோரின் நிதி அனுசரணையில் இப்புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டதாக கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ப.கோணேஸ்வரன் ப.கோணேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment