25 Jan 2019

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிழந்த 130 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிழந்த 130 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள்(பிரித்தானியா கிளை) மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் போதனா வைத்தியசாலையில் வைத்து பார்வையிழந்த 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திரசிசிச்சை வெள்ளிக்கிழமை (25) செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்ட கண் வெண்புரை சத்திர சிசிச்சை பெற்றவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் (பிரித்தானியா கிளை) அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான திருமதி. காந்தா நிரஞ்சன், கே.பாலசுப்பிரமணியம், ராதா தருமரெத்தினம், திருமதி. சவுந்தலா பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

கண் சத்திர சிசிச்சை நிபுணர்களான வருண மற்றும் ஆகியார்கள்  கண்ணில் காணப்பட்ட வெண்புரையை பரிசோதித்து அதன்மூலம் சத்திர சிசிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள். இவர்களுக்கான கண் வில்லைகள், மருந்துகள் என்பனவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட, பார்வையிழந்த மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

பழுகாமம், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாகரை, நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 130 பேருக்கே இவ்வாறு சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது.












SHARE

Author: verified_user

0 Comments: