26 Dec 2018

நித்திரைக் கலக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், மின் கம்பம் ஆகியவற்றின் மீது வேன் மோதி விபத்து

SHARE
வீதி மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், மின் கம்பம் என்பனவற்றின் மீது வேன் ஒன்று மோதியதால் சேதம் ஏற்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 25.12.2018 இரவு 11 மணியளவில் காத்தான்குடி நகர பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால், வேனில் இருந்த சாரதி உட்பட ஏனையோருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விடுமுறையில் சுற்றுலாச் சென்றவர்கள் பயணித்த வேனின் சாரதி தூக்கக் கலக்கத்தில் வேனைச் செலுத்திச் சென்றதால் இவ்விபத்து நேர்ந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் மோதித் தள்ளிய வேன் பின்னர் வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு தரித்து நின்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வேனைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: