மட்டக்களப்பு வாகரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து வழங்கி வைக்கும் சேவையில் ஞாயிற்றுக்கிழமை 11.11.2018 ஈடுபட்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்தமையினால் அதிலிருந்த மக்கள் பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment