6 Aug 2016

வீதி விபத்தில் சிக்குண்ட வயோதிபர் மரணம்

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி மஞ்சந்தொடுவாய்  பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை மாலை (ஒகஸ்ட் 05, 2016) பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும்  மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட
வயோதிபர் மரணமடைந்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காத்தான்குடி கபுறடி வீதியைச் சேர்ந்த மீராமுஹம்மத் அஹமத் லெப்பை (வயது - 70) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் முன்னதாக காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பயனின்றி வயோதிபர் சனிக்கிழமை காலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: