மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி பயனாளிகள் அல்லாத 500 குடியிருப்பு வீடுகளுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி இலவச குடிநீர்
இணைப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்தியக் காரியாலயம் அறிவித்துள்ளது.
ஏறாவூர் பிராந்தியக் காரியாலயத்தினால் செவ்வாயன்று (19.07.2016) விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தலில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளாத, சமுர்த்தி பயனாளியல்லாதவர்களுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கள் முதலமைச்சரினால் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன.
எனவே, சமூர்த்திப் பயனாளிகள் அல்லாத குடியிருப்பாளர்கள் தங்களது விவரங்களை கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகத்துக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment