26 May 2016

திருமலை மாவட்ட இளைஞர் தின முதற்கொடி அரசாங்க அதிபருக்கு!

SHARE
தேசிய இளைஞர் கொடி தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்
சம்மேளனமும் இணைந்து இளைஞர் கொடி விற்பனையை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளவுள்ளன. 
இதனடிப்படையில் திருமலை மாவட்டத்தின் முதலாவது இளைஞர் கொடியை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார வாங்கியதுடன் முதலாவது கொடி மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தியோகபூர்வமாக அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஆலிதீன் அமீர் உட்பட அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்
SHARE

Author: verified_user

0 Comments: