3 May 2016

செங்கலடி ஜீஸஸ் மேரி கல்வி நிலையத்தின் 10 வது வருட நிறைவு பரிசளிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு செங்கலடி ஜீஸஸ் மேரி (ஜே.எம்) கல்வி நிலையத்தின் 10 வது வருட நிறைவு பரிசளிப்பு விழா திங்கட்கிழமை 02.05.2016 செங்கலடி சீனிப்போடியார் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பேச்சு, பாடல் மற்றும் நாடக அம்சங்களில் திறமை காட்டி தாங்களே முன்வந்து வடிவமைத்து செய்து காட்டிய சிறார்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் ஆற்றல்களை வெளிக் கொண்டு வரும் முகமாக பார்வையாளர்களைக் கவரும் கலையம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகளை மாணவர்களே வடிவமைத்து நடாத்துவதற்கு ஆர்வமூட்டப்படுவதாக ஜீஸஸ் மேரி (ஜே.எம்.) கல்வி நிலையத்தின் அதிபர் றொசிற்றா ஜேக்கப்லூக் தெரிவித்தார்.

ஜீஸஸ் மேரி (ஜே.எம்.) நிலையத்தின் அதிபர் றொசிற்றா ஜேக்கப்லூக்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழித்துறைத் தலைவர் கலாநிதி ஜே. கென்னடி, மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவர் வி. கமலதாஸ், செங்கலடி செல்லம் குழுமத்தின் தலைவர் கே. மோகன் உட்பட அதிதிகள், பெற்றோர், மாணவர்கள் நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: