மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை இரவு (15) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் கிராம சேவை உத்தியோகஸ்தர் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது….
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரததேசத்தில் அமைந்துள்ள நாகபுரம் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் கிராம வேவை உத்தியோகஸ்தராகக் கடமை புரியும், எஸ்.விக்னேஸ்வரன் வயது 33 என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மகிழூரைப் பிறப்பிடமாகவும், குருமண்வெளிக் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கிராம சேவை உத்தியோகஸ்த்தருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அ.பிரகலாதன் என்பவரும் இதன்போது தாக்குதலுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சம்பவ விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரததேசத்தில் அமைந்துள்ள நாகபுரம் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் கிராம வேவை உத்தியோகஸ்தராகக் கடமை புரியும், எஸ்.விக்னேஸ்வரன் வயது 33 என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மகிழூரைப் பிறப்பிடமாகவும், குருமண்வெளிக் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கிராம சேவை உத்தியோகஸ்த்தருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அ.பிரகலாதன் என்பவரும் இதன்போது தாக்குதலுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சம்பவ விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment