10 Sept 2015

கல்முனையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

SHARE

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அலுவலகத்தின் கீழ் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கிராமங்களில் நேற்று(10) முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த வேலைத்திட்டம்(16) திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கனேஸ்வரன் தெரிவித்தார். பிரதேசத்தில் இனம்காணப்பட்ட பல இடங்களில்  இந்த வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியேகத்தர்கள் போன்றோரின் உதவிகள் பெறபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: