1 Sept 2015

எட்டாவது பாராளுமன்றின் சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

SHARE

எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஏகமனதாக சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டார்.
எட்டாவது பாராளுமன்றின் சம்பிரதாயபூர்வ அமர்வு இன்று ஆகும். அமர்வுக்கு முன்னர் சபாநாயகர் தெரிவுக்காக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற அமர்வில் சபாநாயகர் பதவிக்கு கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.
அதன் பின்னர் கரு ஜயசூரிய ஏகமனதாக சபாநாயகராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: