4 Aug 2015

திருட்டு

SHARE

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 10,000 ரூபாய் பணம், சுமார் 96,900 ரூபாய் பெறுமதியான தங்கநகைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தி மற்றும் தடிகளுடன் வீட்டினுள் புகுந்த இருவர், அவ்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இருவரின் வாய் மற்றும் கண்களை கட்டிவிட்டு மேற்படி பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம்; வீட்டு உரிமையாளர் நேற்று திங்கட்கிழமை காலை செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுணதீவுப் பொலிஸார், திருட்டில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: