22 Aug 2015

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015 அன்று கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரை கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார். 

வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டமுனயின் வழிகாட்டலில் செயற்பட்ட உப-பொலிஸ் பரிசோதகர் பி.ஏ.அர்ஜூன ரத்னாயக்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா ஆகியோருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓட்டமாவடி எஸ்.எம்.ரீ.ஹாஜீயார் வீதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின் படி ஜேர்மனில் தயாரிக்கப்பட்ட இலக்கம் 38 வகை கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் ஐந்தினையும் கைது செய்துள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர் மற்றுமொருவர் இருப்பதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: